டேராடூன்-உத்தரகண்டின் தாதா ஜலல்பூர் கிராமத்தில், ஹிந்து அமைப்புகளின் மாநாடு நடக்காமல் இருக்க, நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹரித்வாரில், கடந்த டிசம்பரில் நடந்த ஹிந்து அமைப்புகளின் மாநாட்டில், மாற்று மதத்தினர் மீது வெறுப்புணர்வை துாண்டும் வகையில், அதன் தலைவர்கள் பேசியது சர்ச்சையானது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாட்டில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசும் நிகழ்வுகள், தொடர்வது குறித்து வருத்தம் தெரிவித்தது.தாதா ஜலல்பூர் கிராமத்தில், நேற்று நடக்க இருந்த ஹிந்து அமைப்புகளின் மாநாட்டில், இதுபோன்ற பேச்சுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், உத்தரகண்ட் மாநில தலைமை செயலருக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், அந்த மாநாடு நடக்காமல் இருக்க, தாதா ஜலல்பூரில், நேற்று, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த 33 பேரை, போலீசார் கைது செய்தனர்.
டேராடூன்-உத்தரகண்டின் தாதா ஜலல்பூர் கிராமத்தில், ஹிந்து அமைப்புகளின் மாநாடு நடக்காமல் இருக்க, நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.