சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வழக்கறிஞர் கவுன்சில் தேர்வில் மோசடி செய்த இந்திய வம்சாவளியினர் மூன்று பேர் உள்ளிட்ட ஆறு பேரின் பெயர்களை அந்நாட்டு உயர் நீதிமன்றம் வெளியிட்டது.
தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் வழக்கறிஞர் தொழில் செய்ய, வழக்கறிஞர் கவுன்சில் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வில், இந்திய வம்சாவளியினர் மூன்று பேர் உட்பட ஆறு பயிற்சி வழக்கறிஞர்கள் ‘வாட்ஸ்அப்’ வாயிலாக பதில்களை பகிர்ந்து மோசடி செய்தது அம்பலமானது. இது தொடர்பான வழக்கில், பயிற்சி வழக்கறிஞர்கள் எதிர்காலம் கருதி அவர்கள் பெயர்களை வெளியிட உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆனால் ‘பொதுநலன் கருதி பெயர்களை வெளியிட வேண்டும்’ என, அட்டர்னி ஜெனரல் அளித்த மனுவைத் தொடர்ந்து ஆறுபேரின் பெயர்களை உயர் நீதிமன்றம் வெளியிட்டது.இதன்படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோனிஷா தேவராஜ், குஷால் அதுல் ஷா, ஸ்ரீராம் ரவீந்திரன் ஆகியோர் உட்பட ஆறு பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் ஐந்து பயிற்சி வழக்கறிஞர்களின் பார் கவுன்சில் விண்ணப்பங்கள் ஆறு மாதங்களுக்கும், ஒருவரின் விண்ணப்பத்தை ஓராண்டிற்கும் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement