திருமண நிகழ்ச்சியில் மேடையேறி நடனப்பெண்களுடன் ஆட்டம் போட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.. இணையத்தில் வைரல்!

பீகாரில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் நடனப் பெண்களுடன் இணைந்து நடனமாடியதுடன், பணத்தையும் வீசிய காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான கோபால் மண்டல் என்பவர், தனது தொகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

அப்போது திடீரென மேடை ஏறி, அங்கு நடனமாடிய பெண்களுடன் இணைந்து ஆடிய அவர், உற்சாக மிகுதியில் அவர்களின் கைகளையும் பற்றியபடி ஆடினார்.

இந்த காட்சிகள் இணையதளத்தில் பகிரப்படும் நிலையில், அவர் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.