மரியுபோல் உருக்காலையிலிருந்து மனிதாபிமான வழித்தடம் வழியாக உக்ரைன் வீரர்கள் வெளியேற ரஷ்யா அனுமதி.!

மரியுபோல் உருக்காலையில் சிக்கியிருந்த உக்ரைன் வீரர்கள் வெளியேற ரஷ்யா அனுமதித்ததை தொடர்ந்து அவர்கள் பேருந்துகள் மூலம் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக அந்த உருக்காலையைத் தரைமட்டமாக்கும் நோக்கில் ரஷ்ய படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தின.

அங்கு பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்களை வெளியேற அனுமதிக்குமாறு உலக நாடுகளின் தலைவர்கள் வைத்த கோரிக்கையை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.

முதல்கட்டமாக 5 பேருந்துகள் மூலம் உக்ரைன் வீரர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நோவோ-அசோவ்ஸ்க் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் காயமடைந்த 53 வீரர்கள் மருத்துவமனையிலும், 211 பேர் முகாமிலும் தங்க வைக்கப்பட்டனர். மேலும் 600 வீரர்கள் உருக்காலைக்குள் இருப்பதாக கூறப்படுகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.