“தனது இருப்பை காட்டிக்கொள்ள அண்ணாமலை இப்படி பேசுகிறார்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூரில் நடைபெற்ற திட்டங்களின் பூமிபூஜை விழா, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கரூர் வருகை தந்தார், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 54 புதிய சாலை விரிவாக்கப் பணிகள் செய்ய, ரூ. 160 கோடி மதிப்பில் தமிழக முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் அதில், இன்று இரண்டு பணிகள் தொடங்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் இன்னும் ஒரு மாத காலத்தில் தொடங்கப்பட உள்ளது. அதேபோல, கரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் புதிதாக வேளாண் கல்லூரி அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டு, மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், அரவக்குறிச்சியில் கலை அறிவியல் கல்லூரி தொடங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காக 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் அமைப்பதற்கான நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கரூர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

கரூர் மாநகராட்சியில் ரூ. 63 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டவுள்ளது. இதன்மூலம், கரூர் மாவட்டம் இன்னும் வளர்ச்சி பெறும். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேட்கிறீர்கள். அவர் தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக, இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றார். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் போதிய நிலக்கரி இருப்பு ஐந்து நாள்களுக்கு உள்ளது என தான் தெரிவித்த பிறகும், அந்த செய்தியை கருத்து தெரிவிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாமல் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்றனர். பா.ஜ.க மாநில தலைவரிடம் தவறான தகவல்களை ஊடகங்களில் தெரிவிக்கும் போது, இடைமறித்து நிருபர்கள் கேட்டிருக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.