அரிவாள், வாளுடன் பைக்குகளில் வலம் வரும் மர்ம கும்பலால் மக்கள் பீதி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரிவாள், வாளுடன் பைக்குகளில் உலா வரும் கும்பலால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வீரவநல்லூர் மெயின்ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கிற்கு நேற்றிரவு 2 பைக்குகளில் கையில் மதுபாட்டில்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் போட்டுள்ளது. அப்போது திடீரென அவர்களில் ஒருவர் பங்க் ஊழியரை தனது காலால் மிதித்து உதைத்தும், அடித்தும் சென்ற காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த கும்பல் சேரன்மகாதேவியிலுள்ள தனியார் ஓட்டல் மற்றும் ஓயின் ஷாப்பிலும் தங்களது அட்டகாசத்தை நிகழ்த்தியுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.