உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை பெசன்ட் நகரில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்ற அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வி.மெய்யநாதன், பொது மக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிளாஸ்டிக் பைகளை கண்டாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும் என்றார்.

அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து மக்கள் மஞ்சப்பை உயயோகத்திற்கு வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கல்வி நிலையங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.