சீனத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதருடன் 2022 ஜூன் 02ஆந் திகதி அமைச்சில் வைத்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது, தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து விளக்கியதுடன், இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் போது சீனாவின் தாராளமான உதவிகளையும் ஆதரவையும் பாராட்டிய அதே வேளையில், இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். இரு தரப்பினரும் பன்முக உறவுகளையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும் பாராட்டினர்.

இச் சந்திப்பின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஜூன் 05

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.