வங்கதேசத்துக்கு பஸ் மீண்டும் துவக்கம்| Dinamalar

டாக்கா:இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை துவக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பஸ் போக்குவரத்தும் மீண்டும் துவங்கியது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் டாக்கா நகருக்கு, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா மற்றும் திரிபுராவின் அகர்தலா நகரங்களில் இருந்து ரயில் மற்றும் பஸ் சென்று கொண்டிருந்தன.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, 2020 மார்ச்சில் இந்தப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தற்போது, தொற்று பரவல் குறைந்து நாட்டில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து, வங்கதேசத்துக்கான ரயில் சேவை கடந்த மாதம் 29ல் மீண்டும் துவக்கப்பட்டது.இந்நிலையில், அகர்தாலா மற்றும் கோல்கட்டா நகரங்களில் இருந்து, வங்கதேசத்தின் டாக்கா நகருக்கான பஸ் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.