லண்டனில் ரயில் கழிவறையில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்., வாலிபர் கைது


லண்டனில் ரயில் கழிவறையில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் லண்டனில் இருந்து டார்ட்ஃபோர்ட், கென்ட் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது மற்றொரு பயணியால் தாக்கப்பட்டார்.

மே 20, வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ரயில் எல்தாமில் இருந்து புறப்பட்ட பிறகு கழிவறை அறையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

இதையும் படிங்க: ‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி’ புத்தகம் எழுதிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை! 

லண்டனில் ரயில் கழிவறையில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்., வாலிபர் கைது

விசாரணையைத் தொடங்கிய பின்னர் 19 வயது இளைஞரை பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணைகள் தொடரும் நிலையில் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு துப்பறிவாளர்கள் இப்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: லண்டன் பூங்காவில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்; விசாரணையில் பொலிஸார் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.