மேலும் 3 மாதம் பணியாற்ற அட்டர்னி ஜெனரல் ஒப்புதல்| Dinamalar

புதுடில்லி: மத்திய அரசு கேட்டதையடுத்து, ‘அட்டர்னி ஜெனரலாக’ மேலும் மூன்று மாதம் பணியாற்ற, கே.கே.வேணுகோபால் சம்மதித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை, 91, மத்திய அரசு, 2017ல் அட்டர்னி ஜெனரலாக நியமித்தது. இவரது மூன்று ஆண்டு பதவிக்காலம், 2020ல் முடிந்த நிலையில், மத்திய அரசு ஓராண்டுக்கு நீட்டித்தது. கடந்த ஆண்டும், வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி, அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது.

‘வயது மூப்பு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால், அட்டர்னி ஜெனரலாக தொடர்ந்து பணியாற்ற விரும்பவில்லை’ என, மத்திய அரசிடம் வேணுகோபால் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு கேட்டுக் கொண்டதால், மேலும், மூன்று மாதத்துக்கு அட்டர்னி ஜெனரலாக பணியாற்ற வேணுகோபால் சம்மதித்துள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.