“இலங்கையில் பொருளாதார நெருக்கடி 2023-ஆம் ஆண்டு இறுதி வரை தொடரும்” – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி குறைந்தது 2023-ம் ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர், திவால் நிலையை ஒப்புக்கொள்வதாகவும் நாட்டில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறை தொடரும் என்றும் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசிடம் வெளிநாட்டு நாணயம் இல்லாததால் பல மாதங்களாக பணவீக்கம், நீண்ட மின்வெட்டு பிரச்சினையை மக்கள் சந்தித்து வருவதாகவும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.