குறையுது மருந்துகள் விலை| Dinamalar

புதுடில்லி : புற்றுநோய், நீரிழிவு நோய், இருதயம், ரத்தநாளங்கள் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அவற்றுக்கான மருந்துகளின் விலையை ஆக., 15 முதல் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இது தொடர்பாக சில அதிகாரிகள் கூறியதாவது: முக்கிய மருந்துகள் விலை அதிகமாக உள்ளது மத்திய அரசை கவலை அடைய செய்துள்ளது. இதனால் அதன் விலையை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட உடன், மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை திருத்தி அதிகளவு பயன்படுத்தப்படும் மருந்துகளை அதில் சேர்க்கவும் பரிசீலனை செய்யப்படுகிறது என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.