ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற சந்தேக நபர் கைது

கடந்த 13ஆம் திகதி இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற சந்தேக நபர் ,கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (26) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 31 வயதான குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோதே இவ்வாறு கைசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்ளத்தின் அதிகாரிகளினால் விசாரிக்கு உட்படுத்தப்பட்டுளளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.