அவசர கால நிலை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் பிரகடணப்படுத்தப்பட்ட அவசர கால நிலை குறித்து பாராளுமன்ற விவாதம் இன்று நடைபெறவுள்ளது.

பாராளுமன்றம் இன்று மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

2022 ஜூலை 17 ஆம் திகதிய 2288/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அப்போதைய பதில் ஜனாதிபதியினால் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது. சட்ட விதிகளுக்கு அமைய அவசரகால நிலைமைப் பிரகடனம் 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால்  இரத்தாகிவிடும்.

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொது மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்குப் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டிருப்பதாக இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ,ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக சத்தியாப் பிரமாணம் செய்ததையடுத்து வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்பரமானம் செய்யவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.