பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் அரசு மருத்துவமனையில் அழுக்கடைந்த படுக்கை விரிப்பின் மீது பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் படுக்க வைத்த நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதன் மோசமான நிலையை உணரச் செய்தார்.
குருகோவிந்த் சிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளிலும் அமைச்சர் சேட்டன் சிங் ஆய்வு மேற்கொண்டார்.
நோயாளிகளின் படுக்கைகள் அழுக்கடைந்தும் பிய்ந்தும் இருந்ததைக் கண்ட அவர், அதன் நிலையை உணரும்படி துணைவேந்தரை அதன்மீது படுக்க வைத்தார்.