முதலில் சேலம்… அப்புறம் கொங்கு… காலியாகும் எடப்பாடி கூடாரம்? ஓபிஎஸ் தரப்பு பலே பிளான்!

அதிமுகவின் தலைமை பீடத்தில் அமரப் போவது யார்? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை தெரியவில்லை. இதற்கான போட்டி, மோதல், வழக்குகள், திருப்புமுனைகள் என அதிரி புதிரி சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை கொளுத்தி போட்டது. ஏனெனில் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் எனக் கூறப்படும் நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவே செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் எடப்பாடிக்கு வழங்கப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லாமல் ஆனது. அதேசமயம் மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பொதுக்குழு நடத்தலாம் என்றும், அதில் ஓபிஎஸ் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக் காட்டி எடப்பாடி தரப்பினர் நம்பிக்கையுடன் அடுத்தகட்ட ஆலோசனைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

மறுபுறம் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்

தரப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கசந்த காலம் இனி வசந்த காலமாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாக பெருக்கில் மூழ்கி விட்டனர். இந்நிலையில் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

அதில் சேலம், எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான எடப்பாடி ராஜேந்திரன், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தான் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.

அவங்க தரப்பு எங்க தரப்பு-லாம் இனி இல்லை , அதிமுக ஒரே இயக்கம் – ஓபிஎஸ் பேட்டி!

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கோடிக்கணக்கான தொண்டர்கள் தங்களுக்கு கிடைத்த தீர்ப்பாகவே எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக நிர்வாகிகளை குத்தகைக்கு எடுப்பது போல் விலைக்கு வாங்கி பொதுக்குழுவை நடத்தி வந்தார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழு நடத்தி எப்போதும் பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவிற்கு தான் என்றும், அந்த பதவி யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என்றும்

கூறினார்.

ஆனால் அந்த விதியை மாற்றி தானே பொதுச் செயலாளராக வேண்டும் என்ற ஆசையில் நிர்வாகிகளை விலைக்கு வாங்கி பொதுக்குழுவை நடத்தினார். அவரது இந்த செயலை கோடிக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. விரைவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பர் எனக் கூறினார். இதன்மூலம் சேலத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவு வட்டம் பெரிதாக தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. முதலில் சேலம் ஓபிஎஸ் வசப்படும். அடுத்த பொதுக்குழுவிற்குள் ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தையும் வசப்படுத்த வியூகம் வகுத்து செயல்படுவோம் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.