யாருகிட்ட..ஓங்கி அடித்த எடப்பாடி; தலை மீதே வந்து விழுந்த..சுத்தியல்!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இறுதியாக பாஜக தலையீட்டால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வசம் அதிமுக வந்தது.

ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருவரும் அதிமுகவை வழி நடத்தினர். இதற்கிடையே இவர்கள் இருவருக்குள் பனிப்போர் ஏற்பட்டது.

இது, வெளிப்படையாக மோதலாக வெடித்ததால், அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டினார். அதில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்க செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டே நீக்கினார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் அதிமுகவுக்கு உரிமை கோரி சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்தாலும் அடுத்தடுத்த விசாரணையில் ஓபிஎஸ்சுக்கு சாதகமாக மாறியது.

எனவே, நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக, அவரது ஆதரவாளர்கள் கோயில்களில் அபிஷேகம், சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக தனது நெருங்கிய ஆதரவாளர்களின் ஆலோசனைபடி கேரளா சென்ற எடப்பாடி மலையாள மாந்த்ரீகர்களை வைத்து, மிருகங்களை பலியிட்டு பூஜைகள் நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து வழக்கு தீர்ப்பு கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாகவே வரும் என்று எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பு மிகுந்த தெம்போடு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையேயான வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 17ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது.

மேலும், கட்சியின் விதிப்படி பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியும்.

அவைத்தலைவர் அழைப்பு விடுக்க முடியாது. அவர், பொதுக்குழு கூட்டத்தைத் தான் நடத்த முடியும். ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக் குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து நிறைவேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல் ஜூன் 23ம் தேதிக்கு முன் கட்சியில் என்ன நிலை இருந்ததோ, அதே நிலை தான் தற்போது நீடிக்க வேண்டும் என, நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என, அறிவிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், ‘இந்த தீர்ப்பு வருவதற்காகவா கேரளாவுக்கு போய் கோடிகளை கொட்டி பூஜைகளை செய்தோம்?’ என ஆவேச கேள்வி எழுப்பிக்கொண்டும், ஒருவருக்கொருவர் தேற்றிக்கொண்டும், எடப்பாடி ஆதரவாளர்கள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.