ரசிகர்களின் அன்பு தான் எங்கள் உயிர் – மதுரையில் கார்த்தி பேச்சு

‛கொம்பன்' படத்திற்கு பின் மீண்டும் நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணியில் கடந்தவாரம் வெளிவந்துள்ள படம் ‛விருமன்'. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமானார். முத்தையாவின் முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் குடும்ப படமாக இருப்பதால் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலும் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரமாக 400 தியேட்டர்களில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. விருமன் பட வெற்றியால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். சமீபத்தில் சக்சஸ் கொண்டாட்டம் நடந்தது.

இந்நிலையில் விருமன் பட வெற்றியை கார்த்தி, முத்தையா, சூரி, அதிதி உள்ளிட்டோர் மதுரையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பின்னர் ரசிகர்களிடம் பேசிய கார்த்தி : இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது, சென்னையில் கூட வெற்றியை கொண்டாவில்லை, இங்கு வந்து கொண்டாடினால் திருப்தி என்பதால் மதுரைக்கு வந்துள்ளோம். பருத்திவீரனுக்கு பின்னர் லோக்கலா இது போன்ற படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றியையும் பெற்று தந்துள்ளது. மதுரை ரசிகர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. திரையரங்குகளுக்கு பொதுமக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர் என்பது விருமன் வெற்றி காட்டியுள்ளது, ரசிகர்களின் அன்புதான் எங்கள் உயிர். விருமன் படத்தை வெற்றியடை செய்த ரசிகர்களுக்கும், திரையரங்கு நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.