ராஜீவ்காந்தி 78வது பிறந்தநாள்: டெல்லி வீர் பூமியில் ராகுல் காந்தி, பிரியங்கா மரியாதை! ராகுல் உருக்கமான வீடியோ வெளியீடு..

டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரசாரால் கொண்டாடப்பட்டு வருகிறது .  இதையொட்டி டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் , ராஜீவ்காந்தி மகனும், காங்கிரஸ் எம்.பியுமான  ராகுல் காந்தி ,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மலர்தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து, , காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, கே.சி.வேணுகோபால் உள்பட மூத்த தலைவர்கள மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தொண்டர்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், தனது தந்தை குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அத்துடன்  அப்பா ஒவ்வொரு நொடியும் என்னுடன் என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன் என்று பதிவிட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோ வந்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.