இனி தகுதித்தேர்வில் தமிழ் கட்டாயம்!!

தமிழ் மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,  50 மதிப்பெண்களுக்கு 30 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இதில், குறைந்தபட்சம் 40%( 20 மதிப்பெண்கள்) எடுத்து தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிரதான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

exam 1

பகுதி பிரிவில், 150 மதிப்பெண்ணில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக எஸ்.சி. பிரிவினருக்கு 68 மதிப்பெண்ணும், எஸ்.டி. பிரிவினர் 60 மதிப்பெண்ணும், மற்ற பிரிவினருக்கு 75 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழ் தேர்வு கட்டாயம்  நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.