இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதி ரஷ்யாவில் கைது

மாஸ்கோ: இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ரஷ்ய உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஐஎஸ் பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி தரப்பட்டுள்ளது.  துருக்கி இஸ்தான்புல் சென்ற பயங்கரவாதி ஐஎஸ் இயக்கத்தில் இணைந்துள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதி சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

பயங்கரவாதி இந்தியா செல்ல ஏற்பாடு செய்த போது ரஷ்ய உளவுத்துறை கைது செய்தது. கைதான ஐஎஸ் பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளது. இது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தனது சித்தாந்தத்தைப் பரப்ப பல்வேறு இணைய அடிப்படையிலான சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், இணையத்தை உன்னிப்பாகக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.