வட கொரியாவிடம் ஆயுதங்கள் வாங்கி குவிக்க ரஷ்ய முடிவு| Dinamalar

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா , வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா போர் நடத்தி வருகிறது. போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.இந்நிலையில் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியது, உக்ரைனுடன் போர் நடத்தி வரும் ரஷ்யா ஈரான் தயாரித்த டிரோன்களை வாங்கி பயன்படுத்தியது. தற்போது ரஷ்யாவிடம் ஆயுதங்கள், தளவாடங்கள் பற்றாக்குறை நிலவுவதால் ஆயுதங்கள் , தளவாடங்கள் இல்லாமல் ரஷ்யா தவித்து வருகிறது.

இந்த நிலையில் வட கொரியாவிடமிருந்து ராக்கெட்டுகளையும், பீரங்கி குண்டுகளையும் வாங்கி குவிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கும் இடையே பல முறை கடித போக்குவரத்து நடந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.