ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் மரணம்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக இருந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராவணன் மாரடைப்பால் காலமானார்.

இவர் சசிகலாவின் சித்தப்பா கருணாகரன் என்பவரின் மருமகன். அதிமுகவில் சசிகலா செல்வாக்கு மிக்கவராக இருந்த காலகட்டத்தில் கோவை மண்டல அதிமுகவின் அறிவிக்கப்படாத தளபதியாக இவர் பணியாற்றினார்.

கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டியவர் இவர். சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கிய போது ராவணனையும் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார்.

அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி திருச்சியில் அவரது மகனின் மருத்துவ உயர் படிப்புக்காக அவருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது உடல் அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.