செவ்வாயில் குப்பை; விஞ்ஞானிகள் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன் : செவ்வாய் கோள் ஏற்கனவே விண்வெளி குப்பையாகி விட்டது என அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணி 1960ல் துவங்கியது.இதுவரை 50 விண்கலம் செவ்வாய்க்கு (தோல்வியில் முடிந்தவை உட்பட) அனுப்பப்பட்டுள்ளன.

முதலில் சோவியத் யூனியன் ‘1எம்.நம்பர்1’ என்ற விண்கலத்தை ஏவியது. இது தோல்வியில் முடிந்தது. பின் 1964ல் அமெரிக்கா ‘மரினர்’ விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய்க்கு அனுப்பியது. இதுவரைஅமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையம், இந்தியா, யு.ஏ.இ., சீனாஆகிய நாடுகள்வெற்றிகரமாகவிண்கலத்தை செலுத்தியுள்ளன.இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ரோவர், ஆர்பிட்டர்களின் எடை, தற்போது அங்கு செயல்படும் ரோவர்,ஆர்பிட்டர்களின் எடையுடன் ஒப்பிடப்பட்டது.

latest tamil news

இதில் இதுவரை 7118 கிலோ விண்வெளி குப்பை செவ்வாயில் விடப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டது. இதில் நிராகரிக்கப்பட்ட வன்பொருள், செயலற்ற விண்கலம், தரைப்பரப்பில் மோதிய லேண்டர்கள் அடங்கும்.செவ்வாயில் பழங்கால மக்களின் வாழ்க்கை முறை இருந்ததா என ஆய்வு செய்ய, நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலத்தால் சேமிக்கப்பட்டுள்ள பாறை துகள்மாதிரிகளில், இந்த குப்பை பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.