புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த திடீர் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இன்று (30) காலை திடீர் பணிப் பிஷ்கரிப்பை முன்னெடுத்தனர். இதனால் இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த அனைத்து ரயில்களும் தாமதமாவதற்கு அல்லது பயணிக்காமல் இருப்பதற்கு இடமுண்டு என்று புகையிரத திணைக்களம் தெரிவித்திருந்தது. புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையே இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதேவேளை, சற்று முன்னர் இந்த பணிப் பிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

ஓட்டல் அறையில் பிரபல நடிகையும் மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வந்தவர் அகன்ஷா மோகன் (30). இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 16-ம் தேதி வெளியான ‘சியா’ என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகையும் மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பை அந்தேரியில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் தனது அறையில் உள்ள மின் விசிறியில் … Read more

பிரபல நடிகை தூக்குப் போட்டு தற்கொலை: கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது..!

நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் ஹோட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் அகன்ஷா மோகன் (30). மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன ‘சியா’ என்ற படத்தில் ஷிபெய்ல் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன், விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், மும்பை அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் வெகு நேரமாகியும் தனது அறையில் … Read more

வாரிசு சான்றிதழ் பெற புதிய நெறிமுறை.. வெளியிட்டது தமிழக அரசு..!

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், நிர்வாக ஆணையரகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “வாரிசு சான்றிதழ் பெற விரும்புவோர், இறந்த நபர் எந்த இடத்தில் வசித்தாரோ அந்த வசிப்பிடத்திற்கு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வட்டாட்சியரிடம் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். வாரிசு சான்றிதழ் என்பது பொதுவான ஆவணம். அதை சாதி, மதம் பார்க்காமல், எந்தவித தடையும் … Read more

“நான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசினேன்..!'' – `ஓசி பயணம்' சர்ச்சைப் பேச்சுக்கு பொன்முடி விளக்கம்

தமிழ்நாடு பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்தாய்வை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றிருக்கிறது. வரும் அக்டோபர் 13-ம் தேதி மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவிருக்கிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மேலும் நான்காவது கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றபிறகு … Read more

சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலான ஒன்றாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அண்மையில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையிலான திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 1.11 லட்சம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். 1.11 லட்சம் குழந்தைகளில் 43 ஆயிரம் பேருக்கு இதய கோளாறு, சிறுநீர் கழிக்கும் … Read more

பொதுச் செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி தரப்பு நிலைப்பாடு என்ன?

அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரண இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் இது தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை சேர்த்து தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர். அதற்கு ஓபிஎஸ் தரப்போ, தரப்பு பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த முடிவெடுத்துள்ளார்கள். எனவே தேர்தல் நடத்த … Read more

மல்லிகார்ஜூன கார்கே Vs சசி தரூர்: காங்கிரஸ் தலைமை பதவி யாருக்கு?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே – சசி தரூர் ஆகியோர் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தைச் சேராதவர் ஒருவர் கட்சித் தலைவராக உள்ளார். இந்த முடிவில் … Read more

5G சேவையை அக்டோபர் 1 துவக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 முதல் இந்தியாவில் 5G சேவையை துவக்கிவைக்கிறார். இதனை அவர் India mobile Congress 2022 அன்று வெளியிடுகிறார். முதல் கட்டமாக இந்த சேவையை குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே வழங்கவுள்ளார். இந்த புதிய 5G சேவை இந்தியாவில் பல வாய்ப்புகளையும் சமூகத்தின் புதிய தேவைகளை பூர்த்திசெய்யும். இதனால் இந்தியா வரும் 2035 ஆம் ஆண்டு 450 பில்லியன் டாலர் சந்தையாக மாறும். இந்தியாவின் மிகப்பெரிய Spectrum ஏலம் தொடங்கியது. இதற்கு அதிகபட்சமாக … Read more