பள்ளிக்குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய வேன் உதவியாளர் செய்த செயலை பாருங்க..!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி ஒருவர் எல்.கே.ஜி படித்து வருகிறார். சிறுமி தினமும் வேன் மூலமாக பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த சிறுமி தொடர்ந்து அழுது கொண்டிருந்தார்.

இதனால் சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, சிறுமிக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

பின்னர் சிறுமியை அழைத்து பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரது புகைப்படத்தையும் காட்டி விசாரணை மேற்கொண்ட போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சிறுமியை அழைத்து செல்லும் வேன் உதவியாளர் சத்யராஜ் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பள்ளி வேன் உதவியாளர் சத்யராஜை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிக்குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய வேன் உதவியாளரே மாணவியிடம் அத்துமீறி நடந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.