குழந்தையின் கையில் பட்டா கத்தியை வழங்கி கேக் வெட்ட வைத்த நபர் கைது..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், குழந்தையின் கையில் பட்டா கத்தியை வழங்கி கேக் வெட்ட வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சத்யா நகர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் மீது கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தனது அண்ணன் மகன் பிறந்தநாள் விழாவின் போது, குழந்தையை மடியில் வைத்திருந்த அஜித்குமார், பட்டா கத்தியை குழந்தையின் கையில் வழங்கி கேக்கை வெட்டியுள்ளார்.

இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.