பேருந்து நிறுத்த நிழற்குடை மீது மோதி விபத்துக்குள்ளான தனியார் சொகுசு பேருந்து.. 30 பேர் படுகாயம்!

மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, திண்டிவனம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த நிழற்கூடை மீது மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்து பயணிகள் 25 பேர், நிழற்குடையில் பேருந்துக்காக காத்திருந்த 5 பேர் என மொத்தம் 30 பேர் படுகாயமடைந்தனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னே சென்ற வாகனத்தை அந்த சொகுசு பேருந்து முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.