யாருக்கும் இந்த கொடுமை நடக்க கூடாது..!! மைனர் சிறுமி மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாய் கண்முன்னே கற்பழித்த 5 பேர்..!!

தற்போதுள்ள காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தியாவை உலுக்கியது.

அதன்பின்னர் இந்தியாவில் பல சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது குறித்து பல புகார்கள் நாளுக்கு நாள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும் அவரது தாயும் ஞாயிற்றுக்கிழமை தியோகரில் ஒரு விழாவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மதுபூர் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் அவர்கள் இருவரையும் வழிமறித்து, பின்னர் தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவர்களைத் தடுக்க முற்பட்டபோது, ​​அவர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் சிறுமியை அவர் கண்முன்னே கற்பழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக , “தியோகர் காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர ஜாட், சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது, அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். வந்ததும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றவாளிகளில் இருவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் மூவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.