கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சனிக்கிழமை(15) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(16) காலை 10.00 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.