கரையோர ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

கரையோர ரயில் பாதையில் ரயில் சேவை நேர அட்டவணை மறுசீரமைக்கப்படவுள்ளது.

இது ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நேற்று முதல் மறுசீரமைப்பு நடைமுறையை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டிருந்தது. ஆனால் பின்னர் இதில் மாற்றம் மேற்கொள்ளப்ட்டது.

இதற்கமைவாக எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடும் ரயில்கள் புதிய நேர அட்டவணைக்கு அமைவாக 10 நிமிடங்களுக்கு முன்னதாக பயணங்களை ஆரம்பிக்கவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.