புதுடில்லி: மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகருமான விஜயகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1975-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடரான விஜயகுமார் , காவல்துறையில் உயர் பொறுப்புகளை வகித்து வந்தார். தனது பதவி காலத்தில் வீரப்பன் என்கவுன்டர் சம்பத்தில் கமாண்டோ படை தலைவராக இருந்தார்.
ஒய்வு பெற்ற போது மத்திய அரசின் சிறப்பு பணிக்கு அழைக்கப்பட்டு நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டார். 6 வருடம் அப்பணியில் இருந்து ஒய்வு பெற்றார். 2019-ம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக பணியாற்றி வந்த நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement