உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த ஜாக்கி என்ற இளைஞர் தெருவில் நடந்து செல்லும்போது குட்டி நாய் ஒன்று அடிக்கடி குறைத்துள்ளது. இதனால் ஜாக்கி, அந்த நாய் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜாக்கி தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது குட்டிநாய் அவரை பார்த்துக் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜாக்கி சாலையில் இருந்த செங்களால் குட்டி நாயில் தலையில் ஓட்டி அடுத்துள்ளார்.
இதில், குட்டி நாய் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது. இந்த காட்சி அருகில் உள்ள கடை ஒன்றின் சி.சி.டி.வி-யில் பதிவானது. இதையடுத்து அந்த கடையின் உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜாக்கியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து குரைத்ததால் மனமுடைந்து நாயைக் கொலை செய்ததாக அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
newstm.in