பாஜக ஆட்சிக்கு வந்ததே இந்தியை திணிக்கதான்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை: ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழியை திணிப்பதை ஒன்றிய அரசு தனது வழக்கமாகவே கொண்டுள்ளது. ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி செய்கிறது. பல்வேறு மொழியினர் வாழும் நாடு இது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.