ராமஜெயம் கொலை – 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை!!

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

திருச்சி தில்லைநகரில் நடந்த இந்த கொலை வழக்கில் பல ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனிடையே கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணை குழுவினர் தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 நபர்களான திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன் உள்ளிட்டவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது.

 newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.