அசாமில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதியை சுற்றி வளைத்து என்கவுன்டர் – பாதுகாப்பு படை தகவல்

கவுகாத்தி,

அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே என்கவுன்டர் நடந்து வருகிறது.

டின்சுகியா மாவட்டத்தில் உள்ள பெங்கேரி-டிக்போய் சாலையில் உள்ள போர்பதர் பகுதியில் இந்திய ராணுவம், அசாம் மாநில போலீசார் மற்றும் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு இடையே என்கவுன்டர் நடந்து வருகிறது.

இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், டின்சுகியா மாவட்டத்தில் பெங்கேரி-டிக்போய் சாலையில் போர்பத்தர் பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் என்கவுன்டர் தொடங்கியது. பாதுகாப்பு படையினரும், போலீசாரும் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைத்துள்ளனர் என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.