துருக்கியில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி| Dinamalar

இஸ்தான்புல் : துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 53 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல் நகரின் மிகவும் பரபரப்பான தெரு ஒன்றில் நேற்று மாலை பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இதில், உடல் சிதறி ஆறு பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த 53 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. போலீசார் விசாரித்துவருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.