நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் ஒரே நாளில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. மேலும் சீர்காழி வட்டத்தில் பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,
கனமழை
பெய்த காரணத்தினால் பள்ளிகளில் பம்ப்செட் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுவதாலும், மாணவரின் நலனை கருத்தில் கொண்டும் சீர்காழி. தரங்கம்பாடி, வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் நாளை 15/11/2022 ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா

உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கம் போல மயிலாடுதுறை, குத்தாலம் வட்டங்களில் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சீர்காழியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார். மேலும், சீர்காழி பேருந்து நிலையத்தில் வெள்ள பாதிப்புக்கு உண்டான பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.