பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா தீவிர நடவடிக்கை: மத்திய அமைச்சர்| Dinamalar

புதுடில்லி: பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறியுள்ளார்.

எகிப்தில் நடக்கும் ஐ.நா.,வின் பருவநிலை மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசியதாவது: இந்தியாவில் 130 கோடி பேர் வசிக்கின்றனர். இதுவரை உலகின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வில் இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதத்திற்கும் கீழ் தான் உள்ளது. தனிநபர் உமிழ்வில், உலக சராசரியில் 3 ல் ஒரு பங்கு என்ற நிலையில் தான் இருந்த போதிலும் அதனை கட்டுப்படுத்த, கடினமான முயற்சியை மேற்கொண்டு உள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் கலந்த எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருள்களை ஆதாரமாக கொண்டு நாடு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச சோலார் கூட்டணி மற்றும் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு கூட்டணி போன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் சார்ந்த ஒத்துழைப்பு மூலம் வலுவான சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா முயற்சி செய்கிறது. இந்த இரண்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியதுடன் இந்தியா ஊக்கப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.