தென்காசிக்கு அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமாரி. இவர் மகன் சக்திமாரி. இவர் நேற்று இரவு குத்துக்கல்வலசைக்கு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அய்யாபுரம் விளக்கு அருகே சாலையில், இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில், தலையில் பலத்த காயமடைந்த சக்திமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சக்திமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.