கோல்கட்டா: மேற்கவங்க மாநில கவர்னராக ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இ்ம்மாநில கவர்னராக இருந்த ஜக்தீப் தங்கர், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஜக்தீப் தங்கருக்கு பதிலாக, மணிப்பூர் மாநில கவர்னர் இல. கணேசன், மேற்குவங்க மாநில கவர்னராக கடந்த ஜூலை மாதம் முதல் கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் மேற்கவங்க மாநில புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement