தமிழக அரசின் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை, கடந்த ஆண்டில் 64 ஆயிரத்து 187 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், இந்தாண்டு 87 ஆயிரத்து 472 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 17-ம் தேதி நிலவரப்படி, வணிக வரித்துறை வருவாயாக 76 ஆயிரத்து 839 கோடி ரூபாயும், பத்திரப்பதிவுத்துறை, 10 ஆயிரத்து 633 கோடியே 17 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த 7-ம் தேதி, டெல்லியில் நடைபெற்ற 4-வது தேசிய வரிவிதிப்பு விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த சீர்திருத்தவாதத்திற்கான விருதை தமிழ்நாடு பெற்றது.