தோழியை நம்பிய பெண்ணுக்கு காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் மாடலிங் செய்து வருகிறார். இவருக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த டிம்பிள் லம்பா என்ற பெண் அறிமுகமானார். இருவரும் அவ்வப்போது ஷாப்பிங், அவுட்டிங் செல்வது வழக்கம்.

சம்பவத்தன்றும் ராஜஸ்தான் தோழி, இளம்பெண்ணை பார்ட்டி ஒன்றிற்கு அழைத்துள்ளார். இவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, இருவரும் சேர்ந்து கொச்சி எம்.ஜி சாலையில் உள்ள பாருக்கு சென்றனர்.

அங்கே டிம்பிள் லம்பாவுக்கு தெரிந்த விவேக், சுதீப், நிதின் ஆகிய 3 நண்பர்கள் வந்துள்ளனர். அனைவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இளம்பெண்ணை, வீட்டில் விடுவதாக கூறி வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

ஆனால் வீட்டிற்கு செல்லாமல், அங்கே ஒரு சாலையில் வாகனத்தில் சுற்றி சுற்றி வந்துள்ளனர். மேலும் ஓடும் வண்டியிலேயே கேரள பெண்ணை மூன்று பேரும் மாற்றி மாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு அவரை வீட்டில் இறக்கிவிட்டு அனைவரும் வீடு திரும்பினர். உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தனக்கு நேர்ந்தது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் வைஷாலி மற்றும் அவரது நண்பர்களை அழைத்து விசாரித்தனர்.

அப்போது இது திட்டம் தீட்டி நடத்தப்பட்ட சம்பவம் என்று தெரியவந்தது. மேலும் இதற்கு டிம்பிளும் துணை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.