புழல்: மின்சார கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். சென்னை புழல் பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், சக்திவேல் நகர், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் மற்றும் திருமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டதால் தற்போது மின்கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது.
இதனால் மின்கம்பம் சேதம் அடைந்து வருவதுடன் ஷாக் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. மழை மற்றும் காற்றின்போது மின்சார வயர்கள் உரசும் போது தீப்பொறி பறப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதன்காரணமாக மேற்கண்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் புழல் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பங்கள் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.