தலைமறைவு குற்றவாளியாக பாஜ எம்பி அறிவிப்பு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மக்களவை தொகுதி பாஜ எம்.பி. அருண்குமார் சாகர். இவர் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அத்தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது, அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்கள் வைத்ததாகவும், சுவர் விளம்பரம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது கந்த் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, ஷாஜகான்பூரில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் போது எம்பி ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி அஸ்மா சுல்தானா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அருண் குமார் சாகர் ஆஜராகவில்லை. இதனால், அவரை ‘தலைமறைவு குற்றவாளி’யாக நீதிபதி அறிவித்தார். இதற்கான நோட்டீசை அவரின் வீட்டில் ஒட்டும்படியும் உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.