டுவிட்டருக்கு மீண்டும் திரும்பிய விளம்பரத்தாரர்கள்: எலான் மஸ்க் மகிழ்ச்சி

வாஷிங்டன்: டுவிட்டரில் இருந்து வெளியேறிய விளம்பரத்தாரர்கள் மீண்டும் திரும்பியுள்ளதாக டுவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் கூறியுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, விளம்பரத்தாரர்கள் பலரும், டுவிட்டரில் இருந்து வெளியேறினர். விளம்பரத்தினை தற்காலிகமாக நிறுத்தினர்.பல தரப்பும் டுவிட்டரின் எதிர்காலம் கேள்வி குறி தான் என்று எச்சரிக்கை விடுத்தன.

ஒரு புறம் இப்படி எனில், மறுபுறம் டுவிட்டரை மீட்டெடுக்க அடுத்தடுத்த நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் டுவிட்டருக்கும் விளம்பரதாரர்களுக்கும் இடையே தற்போது சுமூகமான நிலை மேம்படத் துவங்கியுள்ளது. டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து, சலசலப்புக்கும், பரபரப்புக்கும் தொடர்ந்து நடைபெற்றது. குறிப்பாக ஆட்கள் குறைப்பில் துவங்கி ப்ளூ டிக் கட்டணம் வரையில் பரபரப்பான சூழல் இருந்து வருகின்றது.

டுவிட்டரின் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் ஆப் ஸ்டோரில் இருந்து, டுவிட்டரை நீக்கி விடுவதாக ஆப்பிள் நிறுவனம் மிரட்டுகிறது. இதற்கு என்ன காரணம்?. அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் இருப்பதை ஆப்பிள் வெறுக்கிறதா? என்ற கேள்வியை எலான் மஸ்க் எழுப்பினார்.

latest tamil news

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப்பில் இருந்து டுவிட்டரை நீக்கினாலும், அதற்கு போட்டியாக சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் இருந்து பின் வாங்க போவதில்லை என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

இதற்கிடையில், டுவிட்டரில் இருந்து வெளியேறி விளம்பரத்தாரர்கள் மீண்டும் திரும்பியுள்ளனர். தற்போது ‛டுவிட்டருக்கு மீண்டும், திரும்பிய விளம்பரதாரர்களுக்கு நன்றி. மீண்டும் வளர்ச்சி பாதையை எட்டும்’ என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.