'சிராக் பஸ்வானுடன் காதல்?' – கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார்.

இப்போது நாடாளுமன்றத்திற்குச் சென்றதன் மூலம் கங்கனா ரனாவத்திற்கு நல்ல நண்பர் கிடைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. கங்கனா ரனாவத்தும், ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானும் இப்போது அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொள்கின்றனர். அவர்களின் நட்பைப் பார்த்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வைரலாகப் பரவி இருக்கின்றன.

இது குறித்து சிராக் பஸ்வான் கருத்து சொல்லாத நிலையில் கங்கனா ரனாவத் இக்கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”நான் அவரைக் காதலிக்கவில்லை. சிராக் ஒரு நண்பர், நான் அவரைப் பார்க்கும்போது, ​​​​நான் அவரை ஒரு நண்பராகத்தான் பார்க்கிறேன். எங்களுக்குள் ரொமான்ஸ் எதுவும் நடக்கவில்லை, நேர்மையாக இருக்கட்டும்.

அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் படத்தை எடுத்தார். அதன் மூலம்தான் எங்களுக்குள் ஒருவரையொருவர் அறிமுகம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டுகளில் அந்த நட்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நான் ரொமான்ஸ் செய்ய நினைத்திருந்தால் அது நடந்திருக்காது. அது நடக்காது. உங்களுக்குத் தெரியும். அவர் சினிமா துறையில் இருந்து வந்தவர். அதனால் நான் அவரை மிகவும் நன்றாக உணர்கிறேன்,” என்று கங்கனா கூறினார்.

கங்கனாவும் சிராக் பாஸ்வானும் முதன்முதலில் 2011ம் ஆண்டு தன்வீர் கான் இயக்கிய மைலே நா மைலே ஹம் படத்தில் இணைந்து நடித்தனர்.

இப்படத்தின் மூலம் சிராக் பஸ்வான் சினிமாவில் அறிமுகமானார். கங்கனா இதில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். எப்போதாவது இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துகொள்வதுண்டு.

இப்போது நாடாளுமன்றத்திற்கு இருவரும் செல்வதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.