காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சில பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து, கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு செல்லும் வழியில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் வளைவில் திரும்பியபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அங்கு, நின்று கொண்டிருந்த பேருந்து மீது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்மநபர்கள் பேருந்தை வழிமறித்து ஒலியெழுப்பி வழிவிட முடியாதா என்று கேட்டு, ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களிடம் இருந்த பட்டாக்கத்தியை கொண்டு பேருந்தின் முன்புற கண்ணாடியை தாக்கியுள்ளனர்.
இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதை கண்ட மர்ம நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் என்று பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சந்தேகம்படும்படியான சில நபற்களின் பெயர்களை கேட்டு தெரிந்து அவர்களை தேடி வருகின்றனர்.