எழுத்துத்தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அப்டேட்!!

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள ஆங்கில மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான அனுமதிச் சீட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுளளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 6 ஆங்கில நிருபர் பதவிக்கும், 3 தமிழ் நிருபர் பதவிக்கும் டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்கை அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கான, விண்ணப்பங்கள் அக்டோபர் 12ஆம் தேதி வரை பெறப்பட்டன. கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

இரண்டு தாள்களைக் கொண்ட எழுத்துத் தேர்வு 21.12.2022 அன்று சென்னை தேர்வு மையத்தில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் நடைபெறும் என்றும் ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் தெரிவித்திருந்ததது.

இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpsc exams.in ஆகிய இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.